ஏப்ரல் மாதத்தில் 16 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிப்பு…!! இனி ஒரே ஜாலி தான் போங்க…!!
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும், விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கியானது மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், ஏப்ரல் மாத்திற்கு என மொத்தம் 16 நாட்கள் விடுமுறையாக அறிவித்துள்ளது. மேலும், வங்கி சேவைகளை பயன்படுத்துவதில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க, இதனை முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 1 பொது விடுமுறை, ஏப்ரல் 5 பாபு ஜெகஜீவன் ராமின் பிறந்தநாள், ஏப்ரல் 10 மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்தநாள் / தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 15 பெங்காலி புத்தாண்டு, ஏப்ரல் 16 போக் பிஹு, ஏப்ரல் 18 புனித வெள்ளி, ஏப்ரல் 21 காரியா பூஜை, ஏப்ரல் 29 பகவான் ஸ்ரீ பரசுராமன் ஜெயந்தி, ஏப்ரல் 30 பசவ ஜெயந்தி / அக்ஷய திரிதியை ஆகியவை உடன் 2 சனிக்கிழமைகள் மற்றும் 4 ஞாயிற்று கிழமைகள் என சேர்த்து மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளித்து அறிவித்துள்ளது . மேலும், இந்த விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என்றும் அறிவித்துள்ளது.


























