நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? மத்திய அரசு ஆலோசனை!!
ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தலாம் என மத்திய அரசு, மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தாக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். நாளொன்றுக்கு 2 ஆயிரம் வரை இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்படுகிறது. இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அந்தந்த மாநிலங்களில் இரவுநேர ஊரடங்குடன் கூடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா உட்பட சில மாநிலங்களில் பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மஹாராஷ்டிரா மாநிலத்திலும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் வரும் வாரங்களில் இன்னும் இரண்டு மடங்கு உயரும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதனால் அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுடன் நேற்று (ஏப்ரல் 27) ஆலோசனை நடத்தியது.
தமிழகத்தில் மே 1, 2 தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியாளர் உத்தரவு!!
அதன்படி நோய் தாக்கம் அதிகமுள்ள 150 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் தடை அறிவிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இருந்தாலும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே முழு ஊரடங்கு குறித்து அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.