TNPSC குரூப் 4 VAO பதவிக்கு 1436 காலிப்பணியிடங்கள் – விரைவில் தேர்வு அறிவிப்பு! முழு விபரம் இதோ!
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் விரைவில் தேர்வு நடத்தப்பட உள்ள வி.ஏ.ஓ பணிக்கான கூடுதல் காலியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதனை பற்றிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.
வி.ஏ.ஓ பதவி:
தமிழக அரசு அலுவலக பணிகளுக்கான பணியாளர்களை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்கிறது. இதற்காக போட்டித்தேர்வுகள் நடத்தப்படும். அதன் அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். போட்டித்தேர்வுகளின் விடைத்தாளானது ஓ.எம்.ஆர் முறைப்படி இருக்கும். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தான் இறுதியாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர், தொடர்ந்து கொரோனா தொற்று பேரலை காரணமாக அனைத்து பொது நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும் தொற்று பரவும் அபாயம் அதிக அளவில் இருந்து வந்ததால் அரசு பணி தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டது.
திருப்பதி தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – வெள்ளப்பெருக்கு, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை கடும் சேதம்!
இதனால் அரசு பணிகளுக்கான தேர்விற்கு தயாராகி வந்தவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாதம் நடப்பாண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி வாரியம் குரூப் 2, குரூப் 1, குரூப் 4 போன்ற தேர்வுகளை பற்றிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை, பொதுத்தகுதி நிபந்தனை, வயது வரம்பு சலுகை மேலும், இட ஒதுக்கீடு, பாடத்திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இதனால் விரைவில் தேர்வுகள் நடக்கும் தேதிகள் வெளியிடப்பட உள்ளது.
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு – அண்ணா பல்கலை ஏற்பாடு!
இது தொடர்பாக, தேர்வர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபமாக அரசு துறைகளில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னதாக தனியாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இனி குரூப் 4 தேர்வுகளுடன் சேர்த்தே விஏஓ தேர்வு நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் முன்னர் அறிவிக்கப்பட்ட விஏஓ பணிக்கான காலியிடத்தின் எண்ணிக்கையை விட தற்போது காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் 1436 காலியிடங்கள் விஏஓ பதவிக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக வாய்ப்புகள் தேர்வர்களுக்கு கிடைக்க இருக்கிறது. எனவே, அரசு பணிக்கு காத்திருந்த தேர்வர்கள் தேர்விற்கு தேவையான ஆயத்தங்களை செய்து கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.