நாளை மறுநாள் வெளியாகும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

0
நாளை மறுநாள் வெளியாகும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - எதிர்பார்ப்பில் மாணவர்கள்!
நாளை மறுநாள் வெளியாகும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - எதிர்பார்ப்பில் மாணவர்கள்!
நாளை மறுநாள் வெளியாகும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. எந்தெந்த வெப்சைட் மூலமாக மாணவர்கள் தேர்வு முடிவினை அறிந்து கொள்ளலாம் என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி துவங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரைக்கும் நடைபெற்றது. கிட்டத்தட்ட 8 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். அடுத்ததாக ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ம் தேதி வரைக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இந்நிலையில், மே ஐந்தாம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் சமையல் எண்ணெய் விலை குறைப்பு – மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

ஆனால், நீட் தேர்வு மே ஏழாம் தேதி நடைபெற இருப்பதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக இருப்பதால் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் குழப்பத்திலும், பயத்திலும் இருந்து வருகின்றனர். மேலும், தேர்வு முடிவினை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!