பள்ளி மாணவர்களின் ஆதார் விபரங்கள் புதுப்பிப்பு தொடக்கம்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் ஆதார் விவரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கல்வித்துறையுடன் இணைந்து ஆதார் நிர்வாகம் (UIDAI) இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, மற்றும் பெற்றோர் விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அவற்றை சரி செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் மூலம் மாணவர்கள் தங்களின் ஆதார் விவரங்களை புதுப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும்!
இந்த நடவடிக்கை மூலம் அரசு கல்வி நிதி, ஊக்கத்தொகை, புத்தக உதவி மற்றும் பிற நலத்திட்டங்களை துல்லியமாக மாணவர்களுக்கு வழங்க முடியும். மேலும், அனைத்து மாணவர்களின் பதிவுகளும் ஒரே தேசிய தரவுத்தளத்தில் ஒருங்கிணைக்கப்படுவது கல்வி துறைக்கு பெரும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், பள்ளியின் வழியாகவே ஆதார் புதுப்பிப்பு செயல்முறையை விரைவில் நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
























