‘டிஜிட்டல்’ மயமாகும் ஒரு கோடி ஓலைச்சுவடிகள்

0
‘டிஜிட்டல்’ மயமாகும் ஒரு கோடி ஓலைச்சுவடிகள்
‘டிஜிட்டல்’ மயமாகும் ஒரு கோடி ஓலைச்சுவடிகள்

‘டிஜிட்டல்’ மயமாகும் ஒரு கோடி ஓலைச்சுவடிகள்

இந்தியாவின் பல்வேறு நூலகங்கள், கல்வி நிறுவனங்கள், மற்றும் கோயில்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் வடிவில் மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நாட்டின் பண்பாட்டு மற்றும் வரலாற்று மரபுகளை காப்பதற்காக மத்திய கலாச்சார அமைச்சகம் மேற்கொண்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், ஒரு கோடியுக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் உயர்தர ஸ்கேனிங் தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் வடிவத்தில் மாற்றப்படுகின்றன. இந்த ஓலைச்சுவடிகளில் மருத்துவம், வானியல், கணிதம், இசை, சமூகம், மற்றும் தத்துவம் போன்ற பல துறைகள் குறித்த அரிய தகவல்கள் உள்ளன.

பசுமை மின்சார உற்பத்தியில் உலகில் நான்காவது இடம் இந்தியா

இந்த முயற்சியின் மூலம் பழமையான அறிவு தலைமுறைகளுக்கு பாதுகாப்பாக கடத்தப்படுவதோடு, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாறும். மேலும், டிஜிட்டல் பாதுகாப்பு மூலம் காலப்போக்கில் அழியும் அபாயத்தில் இருந்த ஓலைச்சுவடிகள் நிரந்தரமாகப் பாதுகாக்கப்படும். இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்தை உலகளவில் அறிமுகப்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்த ‘டிஜிட்டல் ஓலைச்சுவடி திட்டம்’ அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!