XBB.1.5 வைரஸ் அதிவேக பரவல்..அச்சுறுத்தும் பாதிப்பு – எச்சரிக்கும் நிபுணர்கள்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் மாறுபாடு அடைந்த பல்வேறு புதிய வகை வைரஸ்கள் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மருத்துவ நிபுணர்கள் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அச்சுறுத்தும் பாதிப்பு:
கொரோனா வைரஸ் 2020ம் ஆண்டு ஆரம்பம் முதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், அதன் மாறுபாடு அடைந்த வைரஸ்கள் அதிவேகத்தில் பரவி, பாதிப்புகளை அதிகப்படுத்தி வருகிறது. புதிய வகை வைரஸ்கள் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் புதிதாக கண்டறியப்பட்டு வருவதால், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
நீங்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? ஆன்லைனில் விண்ணப்பிக்க Simple Steps இதோ!!
இந்நிலையில், XBB.1.5 வகை புதிய வைரஸ் அமெரிக்காவில் இருந்து பரவ தொடங்கி தற்போது இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி போன்ற பல நாடுகளிலும் பதிவாகி வருகிறது. டிசம்பர் மாதம் அமெரிக்காவில் 20% புதிய தொற்றுகள் பதிவாகி வந்த நிலையில், தற்போது 50% பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த விகிதம் இந்த மாத இறுதிக்குள் இதை விட அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக, பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் நிபுணர் கிழக்கு ஆங்கிலியா பால் ஹண்டர் எச்சரித்துள்ளார்.
இதற்கான நோயெதிர்ப்பு மருந்துகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும், இதற்கு இன்னும் அதிக காலம் கூட ஆகலாம் என்றும், இருப்பினும் XBB.1.5 வகை புதிய வைரஸ் ஒமிக்ரானின் பாதிப்பை விட அதிகமாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.