TNPSC RIMC எழுத்துத்தேர்வு 2023 – டிச.2 சென்னையில் நடைபெறும்!
டேராடூன் ராஷ்டிரிய ராணுவ கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 2ம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத்தேர்வு:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் ராஷ்டிரிய ராணுவ கல்லுாரியில் 2024ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த TNPSC அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எழுத்து தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இந்த நேர்முக தேர்வில் தேர்வாகும் மாணவர்களுக்கு மட்டுமே டேராடூன் ராஷ்டிரிய ராணுவ கல்லுாரியில் படிக்க இடம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், மாணவர் சேர்க்கைக்கான எழுத்துத்தேர்வு டிசம்பர் 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வினை எழுத விருப்பமுள்ள பொது பிரிவின மாணவர்கள் ரூ.600 மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் ரூ.555 செலுத்தி www.rimc.gov.in என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை The Commandant, Rashtriya Indian Millitary Collage, GarhiCantt., Dehradun, Uttrakhand – 248 003 என்கிற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய அக்.15 தான் கடைசி நாள் என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது