WPL 2025: RCB க்கு கிடைத்த முதல் வெற்றி.. பாராட்டு தெரிவித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனை..
2025 ஆம் ஆண்டிற்கான மகளிர் ப்ரீமியர் லீக் (WPL) தொடரானது நேற்று (14-02-2025) குஜராத்தில் உள்ள கோடம்பி, வதோதரா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. மேலும், 22 போட்டிகள் கொண்ட இந்த சீசன் மார்ச் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தெரிவித்துள்ளது. இந்நிலையில் WPL இன் மூன்றாவது சீசனின் முதல் போட்டி குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
WPL 2025 முதல் போட்டி இன்று தொடங்குகிறது.. எங்கு, எப்போது நடைபெறுகிறது என்று தெரியுமா..?
அதாவது, 2025 ஆம் ஆண்டிற்கான WPL முதல் போட்டியில் குஜராத் ஜெயின்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதிக்கொண்டன. மேலும், “முதலில் களமிறங்கிய குஜராத் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்த நிலையில் அதன் பின்னர் பேட்டிங் செய்த RCB அணி 18 ஓவர்களில் 202 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது”. இப்போட்டியில் குஜராத் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிராக “64 ரன்கள் விளாசிய RCB-யின் ரிச்சா கோஷ் ஆட்டநாயகியாக” தேர்வு செய்யப்பட்டார். மேலும், “ரிச்சா கோஷின் அற்புதமான செயல்திறனை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் பாராட்டினார்” என்பது குறிப்பிடத்தக்கது.


























