இந்தியாவில் ஒரே வாரத்தில் 26 லட்சம் பேருக்கு கொரோனா – உலகளவில் முதலிடம்!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இறப்பு எண்ணிக்கையும் 3400க்கு அதிகமாக பதிவாகியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 26 லட்சமாக பதிவாகியுள்ளது. மேலும் 23 ஆயிரத்து 800 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரையிலான 7 நாட்களில் உலகளவில் கொரோனா பரவலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகபட்சமாக 4 லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஆலோசகர் சண்முகம் ராஜினாமா கடிதம் – தலைமை செயலாளரிடம் வழங்கல்!!
இதற்கு முன்னதாக உலகளவில் கொரோனா பரவலில் முதலிடத்தில் அமெரிக்காவில் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 17 லட்சத்து 70 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது இருந்தது. அதனை தற்போது இந்தியா முறியடித்துள்ளது.