தமிழக அரசு ஆலோசகர் சண்முகம் ராஜினாமா கடிதம் – தலைமை செயலாளரிடம் வழங்கல்!!
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவின் படி திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போது அரசு ஆலோசகர் பதவியில் இருந்த சண்முகம் தனது ராஜினாமா கடிதத்தை தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சனுக்கு அனுப்பியுள்ளார்.
அரசு ஆலோசகர் ராஜினாமா:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதன் முடிவில் திமுக 158 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வருகிற மே மாதம் 7 ஆம் தேதி முதல்வர் பதவி ஏற்க உள்ளார்.
TN Job “FB Group” Join Now
கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே தமிழக தலைமை செயலாளராக இருந்து, அரசு ஆலோசராக பணியாற்றி வந்த சண்முகம் அவர்கள் ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமா கடிதத்தை தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – முக ஸ்டாலினுடன் தலைமை செயலர் சந்திப்பு!
ஏற்கனவே தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். அதனை தொடர்ந்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் ராஜினாமா செய்துள்ளார். தற்போது அரசு ஆலோசகர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.