தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – முக ஸ்டாலினுடன் தலைமை செயலர் சந்திப்பு!
தமிழகத்தில் அடுத்த முதல்வராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் சந்தித்து பேசியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பின்னர் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 158 தொகுதிகளில் அந்த கட்சி வெற்றிவாகை சூடியுள்ளது. இதனால் அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அவர் வருகிற மே 7 ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக முதன்முறையாக பதவி ஏற்கிறார். கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக உள்ளதால் பதவி ஏற்பு விழா மிகவும் எளிமையான முறையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வராக உள்ள ஸ்டாலின் அவர்களை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்தித்து பேசியுள்ளார். அவர்களுடன் டி.ஜி.பி. திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடல் எதிரொலி – நோட்டு புத்தகங்கள் தேக்கம்!!
அப்போது கொரோனா பரவல் குறித்தும், எடுக்கப்பட்ட கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தனர். ஊரடங்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டு அதற்கான மறு உத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் தொடரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.