தமிழகத்தில் 3000 ஆசிரியர்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு பணி நீட்டிப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் 3000 ஆசிரியர்களுக்கான பணி நீட்டிப்பு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் தற்போது மீண்டும் அடுத்த மூன்று மாதத்திற்கு பள்ளி கல்வித்துறை பணி நீட்டிப்பு செய்துள்ளது.
பணி நீட்டிப்பு:
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு பொது தொகுப்பூதியத்தில் இருந்து 3000 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதன்பின்னர், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணத்தினால் 3000 ஆசிரியர்களுக்கும் ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டது. அதாவது, கடந்த ஆண்டு மே 18ஆம் தேதி முதல் 2023 மே 17ஆம் தேதி வரைக்கும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டது.
தமிழகத்தில் எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்நிலையில்,இந்த பணி நீட்டிப்பு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டும் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் 3000 ஆசிரியர்களுக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த 3000 ஆசிரியர்களுக்கும் 3 மாதத்திற்கான ஊதியம் வழங்குவதற்கான ஆணையையும் பள்ளிக்கல்வித்துறை தற்போது பிறப்பித்திருக்கிறது.
Exams Daily Mobile App Download