மகளிர் T20 உலகக்கோப்பை: போராடி வீழ்ந்த இந்தியா.. அரையிறுதிக்கு தகுதி பெறுமா??
2024 மகளிர் T20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 3ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில், ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 151/8 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு களம் இறங்கிய இந்திய வீராங்கனைகள் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், 20 ஓவர் முடிவில் 142/9 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
Click Here to Join ExamsDaily Whatsapp Group
இதன்மூலம், 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இத்தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறுவதை பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியே தீர்மானிக்கும். அதாவது இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது நேருக்கு நேர் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளதால் எளிதாக அரையிறுதிக்கு செல்லும். மாறாக நியூசிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும்.


























