சூடுபிடிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் – அரையிறுதிக்கு முன்னேற போவது யார்?
தற்போது வரை 12 போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்கிற கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட்:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது வரை 12 லீக் ஆட்டங்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி செல்லும் என கிரிக்கெட் விமர்சர்கள் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளனர். தற்போது வரையிலும், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து அணிகள் தலா 2 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
இந்தியா vs பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை.. 3வது வெற்றி யாருக்கு? பலத்த எதிர்பார்ப்பு!!
இந்நிலையில், அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்க அணியினர், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணி தான் முன்னேறி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இந்த உலகக்கோப்பை தொடரில் எளிதாக தோல்வியை தழுவி கொண்டிருக்கிறது. இதற்கு பிறகு வரும் ஆட்டத்திலாவது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இனி வரும் லீக் தொடர்களில் ஆஸ்திரேலியா அணி கம்பேக் கொடுத்தால் அரையிறுதிக்குமுன்னேற வாய்ப்பிருக்கும் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.