வாட்ஸ்ஆப்பில் செய்திகளை மறைய வைக்கும் புதிய அப்டேட் – விரைவில் அறிமுகம்!!
வாட்ஸ்ஆப் நிறுவனம் நாம் அனுப்பும் மற்றும் பெறும் குறுந்செய்திகளை மறைய வைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
வாட்ஸ் ஆப் அப்டேட்:
உலக மக்களில் பெரும்பாலானோரால் வாட்ஸ்ஆப் செயலி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி 2009 அன்று வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை பயன்படுத்த ஆரம்பத்தில் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கபட்டது. பிறகு அதையும் அந்நிறுவனம் ரத்து செய்தது. தற்போது வரை அதிக எண்ணிக்கையிலானோர் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துகின்றனர்.
புதிய ஆதார் கார்டு சேர்க்கை அறிதல் – எளிய வழிமுறைகள் இதோ!!
இதனால் அந்நிறுவனம் பயனாளர்களுக்கு அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. இது பயனாளர்களுக்கு செயலியை பயன்படுத்துவதை எளிமை ஆக்குகிறது. தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனத்தை பேஸ் புக் நிறுவனம் வாங்கியுள்ளது. வாட்ஸ் ஆப் நிறுவனம் அதன் தகவல்கள் பரிமாற்றம் குறித்து சமீபத்தில் எழுந்த சர்ச்சைகளுக்கு அந்நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது இந்நிறுவனம் வாட்ஸ் ஆப் செய்திகளை மறையவைக்கும் (Disappearing Messages) புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தவுள்ளது. ஒருவர்க்கு அனுப்பும் செய்தியை மற்றும் நாம் பெறும் செய்தியை மறைய வைக்கலாம். இதற்கான கட்டுப்பாடு பயனர் கைகளில் இருக்கும். 24 மணி நேரம் அல்லது 7 நாட்களுக்கு என்ற இரண்டு ஆப்சன் உள்ளது. இதில் ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம் எனவும், அந்த செய்தியை ஸ்கிரீன் சாட் மூலம் சேமித்து வைத்துக் கொள்ளலாம் எனவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.