மே 31 வரை உள்நாட்டு விமானங்களில் 80% பயணிகள் மட்டுமே அனுமதி – மத்திய அரசு உத்தரவு!!
கொரோனா தொற்றின் பாதிப்பு நாடு முழுவதும் தீவிரமடைந்து வருவதால் வரும் மே 31ம் தேதி வரை அனைத்து உள்நாட்டு விமானங்களிலும் 80% பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் எதிரொலி:
நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் பாதிப்பு இருந்து வருகிறது. இதன் தாக்கம் அதிகமாக இருந்ததால் மத்திய அரசு கடந்த வருடம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும், பல தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அவசர தேவைகளுக்கு பயணிக்கும் மக்கள் அரசின் இ-பாஸ் வசதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.
நாடு தழுவிய பொதுமுடக்கம் அவசியம் – கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரே வழி!!
முதல் கட்ட ஊரடங்கில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. தொற்றின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் கட்டுப்பாடுகளுடன் பொதுப்போக்குவரத்துக்கு அரசு அனுமதியளித்தது. தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மார்ச் மாத ஆரம்பத்தில் தொடங்கிய நிலையில், தொற்றின் தாக்கம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் அலையின் தாக்கத்தினால் மத்திய அரசு பல தீவிர நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது. நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாநிலங்கள் தாமாக சூழ்நிலைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்கியுள்ளது. தற்போது மே 31ம் தேதி வரை உள்நாட்டு விமானங்களில் 80% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்றை தடுக்கும் வகையில் விமானங்களில் சமூக இடைவெளியை அதிகரிக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்