மக்களுக்கு எச்சரிக்கை – உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் வருகிற 20ம் தேதி வரை மழை!
தற்போது வங்க கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக தமிழகத்திற்கு வருகிற 20-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
வானிலை தகவல்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் குறிப்பாக மயிலாடுதுறைக்கு அருகே உள்ள சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதனால் சீர்காழியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் சேதமடைந்தன.
Follow our Instagram for more Latest Updates
இதையடுத்து கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்த நிலையில் கடந்த 10ம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மீண்டும் தமிழகத்தில் அதீத கனமழை பெய்ய தொடங்கியது. மேலும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதையடுத்து தற்போது மீண்டும் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (19.11.2022) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
மேலும் இது தொடர்பாக வெளியான அறிக்கையில், வங்க கடலில் புதியதாக குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு நாளை மறுநாள் முதல் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்கு வருகிற 20-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.