தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே வானிலை நிலவரம் சற்று வேறுபாடாக இருந்து வருகிறது. ஜனவரி மாதம் யாரும் எதிர்பாராத வகையில் மழை பொழிந்தது. அதன்பின்பு தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று கடுமையாக இருந்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் சில தினங்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தென் தமிழக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (ஏப்ரல் 13) தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்தியாவில் 1.36 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 879 பேர் உயிரிழப்பு!!
மேலும் தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.