இந்தியாவில் 1.36 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 879 பேர் உயிரிழப்பு!!
நாட்டில் கொரோனா நோய்த்தொற்று மிக வேகமாக இருந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டுமே கொரோனா வைரஸ் காரணமாக 879 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த்தொற்றால் 1,61,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1,36,89,453 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் நாட்டில் கொரோனாவால் 879 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,71,058 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 97,168 பேர் குணமடைந்துள்ளனர்.
RTGS பரிவர்த்தனை ஏப்ரல் 18ல் செயல்படாது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
இதனால் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,22,53,697 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 12,64,698 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் இதுவரை 10,85,33,085 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் நாட்டில் சுமார் 40,04,521 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.