1272 ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான ஏப்ரல் மாத ஊதிய கொடுப்பாணை – பள்ளிக்கல்வி இயக்குனர் கோரிக்கை!!
தமிழகத்தில் காலியாக இருந்த 5000 ஆசிரியரல்லா காலி பணியிடங்களில் தற்போது பணிபுரிந்து வரும் 1272 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பாணையை நீடிக்க கோரி தற்போது அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியரல்லா பணியிடங்கள்
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் துப்புரவாளர் பணியிடத்திற்காக 2999 பணியிடங்களும் காவலர் பணியிடங்களுக்காக 2001 பணியிடங்களும் தமிழக கல்வி துறை சார்பில் தோற்றுவிக்கப்பட்டது.
டெலிகிராமில் க்ரூப் வீடியோ கால் செய்யலாம் – சிஇஒ அறிவிப்பு !
மொத்தமாக 5000 பணியிடங்கள் இருந்த இந்த வேலைகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டது. அதே போல் இந்த பணியிடங்களுக்கு என்று மொத்தமாக 778 துப்புரவு பணியாளர்களும் 494 இரவு நேர காவலர் பணியாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்பட்டனர்.
TN Job “FB Group” Join Now
இவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தொடர் நீட்டிப்பு வழங்குமாறு பள்ளி கல்வி இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார். அதே போல் இவர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்காக வழங்க இருக்கும் ஊதிய கொடுப்பாணையை வழங்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உடனடியாக ஊதியம் பெறத்தக்க வகையில் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.