
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி..!! “ஒரு சகாப்தம் நிறைவு” பெற்றதாக BCCI புகழாரம்..!!
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விராட் கோலி. இவர் அதிரடி பேட்டிங் ஆளும் தனது அருமையான பில்டிங் ஆளும் எண்ணற்ற ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளார். இந்நிலையில், இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். மேலும், இவர் இதுவரை 123 டெஸ்ட்களில் 9230 ரன்களை குவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 253 ரன்களும், 7 இரட்டை சதங்களும், 30 சதங்களும் மற்றும் 31 அரை சதங்களும் அடங்கும்.
வேலையில்லாதவரா நீங்கள்..? அப்போ உங்களுக்கு தான் இந்த மாதம் ரூ. 1000 உதவித்தொகை…!! முழுசா தெரிஞ்சுக்க இத படிங்க…
மேலும், ஓய்வு குறித்து பேசிய விராட், “டெஸ்ட் விளையாடுவது எனக்கு எப்போதுமே நெருக்கமானதாகும். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு என்னால் முடிந்த அனைத்தையும் தந்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் விராட் கோலியின் ஓய்வு குறித்து பேசிய BCCI, “இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சகாப்தம் நிறைவு பெற்றதாக” புகழாரம் சூட்டியுள்ளது. மேலும், ரோஹித் சர்மாவை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த விராட் கோலி, இதற்கு முன்னரும் T20 கிரிக்கெட் உலக கோப்பை வென்ற கையோடு T 20 ஃபார்மட்டில் இருந்து ஒரே நேரத்தில் இருவரும் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

























