தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில் – நாளை முதல் இயக்கம்!!
கொரோனா தொற்று காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலிருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் நாளை (21-04-2021) முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் நாட்களில் மாநிலம் முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் பொதுமக்களிடையே காணப்படுகின்றது. இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக தமிழகத்தில் வேலை பார்த்து வந்த வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப துவங்கியுள்ளனர். இதனால் சென்னை சென்ட்ரல் மற்றும் கோவை ரயில் நிலையங்களில் வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் வட மாநிலத்துக்கு செல்லும் தொழிலாளர்களின் நலன் கருதி, வழக்கம் போல செயல்படுத்தப்படும் சிறப்பு ரயில்கள் முன்னதாக இயக்கப்படவுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து மேற்கு வங்கம் வரை வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதன்படி விழுப்புரம் – புருலியா வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம் நாளை முதல் நிறுத்தம் – உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!!
முன்னதாக இந்த சிறப்பு ரயில்கள் மே மாதம் 5 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்த போது, ‘விழுப்புரம்-புருலியா வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் மே 5 ஆம் தேதிக்கு பதிலாக நாளை முதல் (21-04-2021) இயக்கப்படும். மறுமார்க்கமாக புருலியாவிலிருந்து விழுப்புரத்துக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்’ என கூறியுள்ளது.