தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம் நாளை முதல் நிறுத்தம் – உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா தொற்று தீரும் வரையிலும் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆம்னி பேருந்து:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதை தடுக்க மாநில அரசு அறிவித்த கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் இன்று (20-04-2021) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி போக்குவரத்திலும் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக தொலை தூரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன் படி சென்னையிலிருந்து திருச்சி, மதுரை போன்ற இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இரவு 10 மணிக்குள்ளாக அந்தந்த இடங்களுக்கு சென்று சேரும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதுபோல ஞாயிற்று கிழமைகளில் பேருந்து இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளை போல ஆம்னி பேருந்துகளும் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் தீரும் வரையிலும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆம்னி பேருந்துகளின் சங்க உறுப்பினர் ஜெயம் பாண்டியன் கூறுகையில், ‘ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க செயற்குழு இன்று காலை (20-04-2021) நடைபெற்றது.
தமிழகத்தில் தியேட்டர்கள் இயக்கம் – உரிமையாளார்கள் முடிவு!!
அந்த கூட்டத்தில் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பொதுவாக ஆம்னி பேருந்துகளின் இயக்கம் இரவு நேரங்களில் தான் அதிக அளவு காணப்படும். ஆம்னி பேருந்துகளை பகலில் இயக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் கொரோனா பரவல் முற்றிலுமாக தீரும் வரையும் ஆம்னி பேருந்துகளின் இயக்கம் நிறுத்தி வைக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.