தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு – விஜயகாந்த் வலியுறுத்தல்!!

0
தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு - விஜயகாந்த் வலியுறுத்தல்!!
தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு - விஜயகாந்த் வலியுறுத்தல்!!
தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு – விஜயகாந்த் வலியுறுத்தல்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தேவை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு தேவை:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 21 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசும் பல சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு, வார இறுதிநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இருந்த போதிலும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. இதனால் மே 6 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு பல தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகமாக பரவி வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க இடமில்லை என்ற செய்தி கேட்டால் வேதனை அளிக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா 3வது அலை பரவல் – மத்திய அரசு எச்சரிக்கை!!

இதனால் அரசு சற்றும் கால தாமதம் இல்லாமல் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும். மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பல முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த வேண்டும்” இவ்வாறாக மத்திய மாநில அரசின் கோரிக்கை வைத்ததோடு மக்கள் கட்டயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!