தமிழகத்தில் LPG சிலிண்டர் மானியம், நகைக்கடன் தள்ளுபடி? அரசுக்கு கேள்வி!
தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் ஆளுநரின் உரையில் முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளிவராதது அதிருப்தி அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் இன்று சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடத்தப்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் முதல் உரையை வழங்கி கூட்டத்தை தொடங்கி வைத்தார். இன்றைய கூட்டத்தில் தமிழகத்திற்கான புதிய திட்டங்கள் பலவற்றையும் ஆளுநர் அறிவித்துள்ளார். ஆளுநர் ஆற்றிய உரையில், தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொள்ளும்.
சென்னை மெட்ரோ ரயில் ஞாயிற்றுக் கிழமை நேரம் – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் சமுக நீதியை பாதுகாக்கும் வகையில் 69% இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். தமிழக அரசு அலுவலகங்களில் பிறமாநிலத்தவர்கள் அதிகம் பணியில் சேரும் வகையில் உள்ள அரசின் ஆணைகளை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம் மற்றும் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு போன்ற திட்டங்களை பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், ஆளுநர் உரையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ரூபாய் நிதியுதவி திட்டம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, வங்கிகளில் 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி, கேஸ் சிலிண்டருக்கு ₹100 மானியம் உள்ளிட்ட திட்டங்களை பற்றிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. இது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டிவீட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.