சென்னை மெட்ரோ ரயில் ஞாயிற்றுக் கிழமை நேரம் – அறிவிப்பு வெளியீடு!
சென்னை மெட்ரோ ரயிலில் வரும் ஜூன் 27ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை ரயில் சேவையின் இடைவெளி நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ சேவை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து பயணங்களுக்கு அரசு தடை விதித்தது. இதனால் பேருந்து, ஆட்டோ, சென்னை மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் அனைத்தும் கடந்த மே 10ம் தேதி முதல் இயங்கவில்லை. இந்நிலையில் ஜூன் 27ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தாக்கம் குறைந்துள்ள சென்னை நகரில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு – கொரோனா தடுப்பூசி!
கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு பின்னர் சென்னை மெட்ரோ சேவை இன்று தொடங்கப்பட்டது. மெட்ரோவில் பயணிப்பதற்கு என்று சில கட்டுப்பாடுகளையும் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பயணிகள் அனைவரும் உட்கார்ந்த நிலையில் முகக்கவசத்துடனும், சமூக இடைவெளியுடனும் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அலுவலக பணி நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமையானா ஜூன் 27ம் தேதி அன்று மெட்ரோ ரயில் இயக்க நேரத்தின் இடைவெளியில் மாற்றம் செய்யவிருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் 9 வரை முறையே 1 மணி நேரம் மற்றும் 2 மணி நேர இடைவெளியில் ரயில்கள் செயல்படும். விம்கோ நகர்-விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் 1 மணி நேரத்திலும், சென்ட்ரல்-விமான நிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை வழித்தடத்தில் 2 மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.