பிரிந்துவிடும் முத்து மீனா.. ரவி எடுத்த அதிரடி முடிவு – “சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், முத்து மீனா பிரிந்துவிட விஜயா மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். இந்நிலையில் ரவி மீனா மீது தவறு இல்லை என முத்துவிடம் சொல்லி புரிய வைக்க முத்து புரிந்து கொள்வாரா என்பது இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், ரவி கல்யாணத்தால் அருணாச்சலத்திற்கு பல பிரச்சனை வருகிறது. போலீஸ் மீனா தான் சாட்சி கையெழுத்து போட்டார் என சொல்ல அதை கேட்டு முத்து அதிர்ச்சி அடைகிறார். இந்நிலையில் மீனா ரவியை வர வைக்க, நான் செத்து போறேன் என பிளாக்மெயில் செய்கிறார். ஆனால் போலீஸ் அவர்கள் மேஜர் என்பதால் எதுவும் செய்ய முடியாது என வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். அருணாச்சலம் ரவியை வீட்டை விட்டு அனுப்புகிறார்.
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் – போராட்டம் வாபஸ்!
இந்நிலையில் மீனா வீட்டிற்கு வர முத்து இனிமேல் நீயும் இந்த வீட்டிற்கு வர கூடாது என சொல்கிறார். பின் ரோகிணி மீனாவை இந்த பொண்ணு ஏற்கனவே சந்திக்க வந்திருக்கிறது என சொல்லி ஏற்றிவிடுகிறார். அதனால் முத்துவிற்கு பயங்கர கோவம் வர, மீனா இனிமேல் வீட்டிற்கு வரவே கூடாது என சொல்கிறார். இந்த விஷயம் ரவிக்கு தெரிய வர முத்து மீனாவை சேர்த்து வைக்க, அவர் பல திட்டங்களை தீட்டுகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.