தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் – போராட்டம் வாபஸ்!

0
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் - போராட்டம் வாபஸ்!
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் - போராட்டம் வாபஸ்!
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் – போராட்டம் வாபஸ்!

தமிழகத்தில் இன்று (அக்.24) மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்ற அறிவிப்பு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள்

தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டது. அதனால் மக்கள் பலர் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்றனர். அதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆனால் அதிகமான மக்கள் பயணம் செய்ய ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்தனர். அதை சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் வந்தது.

வங்கக்கடலில் நிலவும் அதி தீவிர புயல்.. தமிழகத்தில் கனமழை பொழியும் – வானிலை எச்சரிக்கை!

அதனால் 120 பேருந்துகளை காவல்துறையினர் சிறை பிடித்தனர். இந்நிலையில் அந்த பேருந்துகள் எந்த தவறும் செய்யாமல் சிறைபிடிக்கப்பட்டதாக ஆம்னி பேருந்து சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறைபிடிக்கப்பட்ட 120 பேருந்துகளை விடுவிக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் இன்று (அக்/ 24) மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அரசு சிறைபிடிக்கப்பட்ட 120 பேருந்துகளை விடுவிக்க முன்வந்தால் அந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்று வழக்கம் போல ஆம்னி பேருந்துகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!