செயினை அடகு வைத்த முத்து.. சண்டையிடும் மீனா .. அவமானப்படுத்தும் விஜயா – “சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், முத்துவும் மீனாவும் சேருவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்றைய எபிசோட் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. முத்து நகையை அடமானம் வைத்து அண்ணாமலைக்கு உதவி செய்ய அதை சொல்லாமல் மீனாவிடம் மறைக்கிறார், விவரம் தெரியாத மீனா முத்து மீது கோவமாக இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், முத்து வீட்டிற்கு வர மீனா செயின் எங்கே என கேட்கிறார். செயினை கொக்கி போட கொடுத்திருப்பதாகவும், அந்த கடை மூடி இருப்பதாக முத்து பொய் சொல்கிறார். அதை கேட்ட மீனாவிற்கு பயங்கர கோவம் வருகிறது. அடகு கடையில் செயின் கொக்கி போட கொடுத்தீர்களா என மீனா கேட்க, முத்து எதுவும் பேசாமல் இருக்கிறார். நகையை அடகு வைத்து குடிக்க வேண்டுமா என மீனா கேட்க நான் அது போல ஆள் இல்லை என முத்து சொல்கிறார்.
கோபி, ராதிகாவை எதிர்த்து பாக்கியா எடுக்க போகும் முடிவு ? பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!
அப்போ செயின் எங்கே என மீனா கேட்க, உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என முத்து கோவமாக கிளம்புகிறார். மீனா அண்ணாமலையிடம் விவரத்தை சொல்ல, அதை கேட்ட விஜயா மீனாவை நக்கல் அடிக்கிறார். அதாவது இதுவரை குடிக்க மட்டும் தான் முத்து செய்வான் இவளை எப்போது கல்யாணம் செய்தானோ இப்போது ததிருடுகிறான் என்பதாக சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
அதை கேட்டு மீனாவிற்கு கோவம் அதிகமாகிறது. மறுபக்கம் மீனா அம்மா வீட்டிற்கு செல்கிறார். இதனால் இரவு முத்து வீட்டிற்கு வராமல் காரில் படுத்து தூங்குகிறார் முத்து. இப்படியே கதை செல்ல முத்துவின் நல்ல குணத்தை மீனா புரிந்து கொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்
Exams Daily Mobile App Download