கோபி, ராதிகாவை எதிர்த்து பாக்கியா எடுக்க போகும் முடிவு ? பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா வீட்டில் ராதிகா தங்கிவிட, பாக்கியா எதுவும் பேசாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடந்துள்ளது. ஒரு பக்கம் ராதிகா தன்னுடைய வேலையை காட்டினாலும் மறுபக்கம் பாக்கியா எதுவும் பேசாமல் பொறுமையாக இருப்பது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்து வருகிறது. அது மட்டுமில்லாமல் முன்னதாக கோபி பாக்கியாவை கொடுமைப்படுத்திய போது அப்பாவி மனைவியாக அவர் காட்டப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது பாக்கியா பெரிய பிசினஸ் செய்பவராக இருக்கும் போது கூட அவர் எதுவும் பேசாமல் இருப்பது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதனால் ராதிகா, கோபிக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல பாக்கியா மாற வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் வேறு மொழியில் எடுக்கப்பட்ட பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவிடம் உங்களுடைய கணவர் எங்கே என ஒருவர் கேட்க, அவர் இறந்துவிட்டார் என மாஸ் டயலாக் பேசி இருப்பார். அது போல தமிழில் எப்போது எபிசோடுகள் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download