முதல் கணவருடன் வாழ முடிவெடுக்கும் அமிர்தா.. பாக்கியாவை அசிங்கப்படுத்தும் கோபி – பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், அமிர்தாவின் முதல் கணவன் கணேஷ் மீண்டும் உயிருடன் வந்துவிட, அவர் அமிர்தா உடன் மீண்டும் வாழ நினைக்கிறார். அதனால் அமிர்தா எழிலை பிரிய முடிவு செய்ய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், எழில் அமிர்தா சந்தோசமாக தங்களின் இல்லற வாழ்க்கையை தொடங்கி இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு நடுவே அமிர்தாவின் முதல் கணவர் கணேஷ் வந்து பிரச்சனை செய்கிறார். அவர் இறந்து விட்டதாக நினைத்து எழில் அமிர்தாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
தமிழகத்தில் தங்கத்தின் விலை சரிவு – குஷியில் பெண்கள்.. உடனே நகை வாங்குங்க!
இந்நிலையில் கணேஷ் அமிர்தாவுடன் வாழ நினைக்கிறார். அமிர்தா மறுப்பு தெரிவிப்பார் என குடும்பத்தில் அனைவரும் நினைக்க, அமிர்தா எழிலை பிரிய முடிவு செய்கிறார். அதை கேட்டதும் குடும்பமே அதிர்ச்சி அடைகிறது. தன்னுடைய மகனின் வாழ்க்கை கேள்விக்குறியாக கஷ்டத்தில் பாக்கியா இருக்க, அதையே சாக்காக வைத்து கோபி, பாக்கியாவை அவமானப்படுத்துகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.