அனைத்து பள்ளிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
ஆக்ராவில் ஸ்ரீ ராம்லீலா மஹோத்ச விழா காரணமாக அக்.11 மற்றும் அக்.12 ஆம் தேதிகளில் பள்ளிகளில் மூடப்படும் என அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
ஆக்ராவில் இன்று (அக்.11) மற்றும் அக்.12 ஆம் தேதிகளில் நர்சரி முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும் என டிஎம் பானு சந்திர கோஸ்வாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியான அறிவிப்பில் ஜனக்புரி நிகழ்வு காரணமாக, இரண்டு நாட்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கான்வென்ட் மற்றும் கவுன்சில் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பானது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தங்கத்தின் விலை சரிவு – குஷியில் பெண்கள்.. உடனே நகை வாங்குங்க!
நேற்று இரவு முதல் ஆக்ரா முழுவதும் விழா தொடங்கி இருக்கிறது. ஸ்ரீ ராம்லீலா மஹோத்சவின் போது, ராம் பராத் ஸ்ரீ மங்காமேஷ்வர் கோவிலில் இருந்து நிகழ்ச்சி தொடங்கி. அது பழைய நகரம் வழியாக, ராம் பராத் சஞ்சய் இடத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜனக்புரியை அடையும். இதைத் தொடர்ந்து நான்கு நாட்கள் ஜனக்புரி நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சி காரணமாக சாலைகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால் பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.