பாக்கியாவை மட்டம் தட்டும் ஈஸ்வரி.. கைகொடுக்கும் ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிற்கு மீண்டும் கன்டராக்ட் கிடைத்து விட்டது. ஆனால் ஈஸ்வரி அவரை வேலைக்கு போக கூடாது என தடுக்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவிற்கு எல்லா வேலையும் பறி போன நிலையில், அவர் முயற்சியை கைவிடாமல் போராடி, அரசு கன்டராக்ட் ஒன்றை வாங்கி விடுகிறார். இந்த சந்தோசமான விஷயத்தை பாக்கியா வீட்டில் சொல்ல, அது ஈஸ்வரிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பதிலுக்கு கோபியும் பாக்கியாவை மட்டம் தட்டி பேசுகிறார். ஆனால் பாக்கியா தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார்.
தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு!
இந்நிலையில் பாக்கியா கன்டராக்ட் கிடைத்த சந்தோஷத்தில் இருக்க, அப்போது ராதிகா பாக்கியாவிற்கு கை கொடுக்கிறார். இந்த வீட்டில் பாக்கியா படும் கஷ்டங்களை எல்லாம் பார்த்து ராதிகா பாக்கியாவிற்கு உதவி செய்ய நினைக்கிறார். இருவரும் சேர்ந்து இனி கோபிக்கு சரியான பாடம் கற்றுக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இனி வரும் எபிசோடில் பரபரப்பான சம்பவங்கள் நடக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.