கோபியை வெளுத்து வாங்கும் பாக்கியா.. கதிரிடம் சண்டை போடும் முல்லை.. வீட்டை விட்டு கிளம்பும் மீனா – விஜய் டிவி சீரியல் அப்டேட்ஸ்!
விஜய் டிவி சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில், டாப் வரிசையில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், சிறகடிக்க ஆசை ஆகிய சீரியல்கள் இருக்கின்றன. இந்த சீரியல்களில் அடுத்து வரும் எபிசோடுகள் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது
சீரியல்கள்:
தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இந்நிலையில் சின்னத்திரையில் டாப் சீரியல் வரிசையில் விஜய் டிவி சீரியல்கள் இருக்கின்றன. குறிப்பாக பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், சிறகடிக்க ஆசை போன்ற சீரியல்கள் முதல் 3 இடங்களில் இருக்கின்றன. அந்த வகையில் இந்த சீரியலின் தினசரி எபிசோட் குறித்து மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றன.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா பாக்கியா வீட்டில் இருக்க அவருக்கு ஒரு காபி கூட கிடைக்காமல் இருக்கிறது. அதனால் ராதிகா அலுவலகத்தில் கண்டிப்பாக பழி வாங்குவார் என நினைத்த பாக்கியாவிற்கு அது போலவே நடக்கிறது. ஆனால் எல்லாவற்றிலும் பாக்கியா சரியாக இருப்பதால் ராதிகாவால் பாக்கியா மீது குற்றம் சொல்ல முடியவில்லை. அடுத்ததாக மீண்டும் கோபி குடித்துவிட்டு வீட்டிற்கு வர, ஜெனியிடம் அவர் பேசுகிறார். கோபி செய்வது பிடிக்காமல் ஜெனி செழியன் கிளம்பி செல்ல, அந்த சமயம் பாக்கியா அதையெல்லாம் பார்த்து கடுப்பாகிறார். இதனால் கோபி, ராதிகாவின் கதைக்கு பாக்கியா ஒரு வழி செய்வார் என்பதில் சந்தேகமில்லை
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கடையில் செய்த சில மாற்றங்களை பற்றி ஜனார்த்தனன் கேட்கிறார். வழக்கமாக அரிசி கொடுப்பவரை ஏன் மாற்றிவிட்டீர்கள் என ஜனார்த்தனன் ஜீவாவிடம் கேட்க, ஜீவா அவர் தரமான பொருள்கள் கொடுக்கவில்லை என சொல்கிறார். உடனே ஜனார்த்தனன் என்னிடம் கேட்காமல் எதுவும் செய்ய கூடாது என சொல்கிறார். பின் கஸ்தூரி ஐஸ்வர்யாவை பார்த்துக் கொள்ள உடனே ஐஸ்வர்யா அவரிடமும் திமிராக பேசுகிறார். முல்லைக்கு ஐஸ்வர்யாவை கண்டாலே பிடிக்காமல் இருக்க, கண்ணனிற்கு பணம் கொடுத்ததை சொல்லி சண்டை போடுகிறார். இதே நிலைமையில் சென்றால் கண்ணனும் ஜீவாவும் விரைவில் மூர்த்தியுடன் சேர்ந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனாவை அடிக்கடி அவமானப்படுத்த, அதை சொல்லி விஜயா அசிங்கப்படுத்துகிறார். உடனே கோவப்பட்ட மீனா உங்களுக்கு என்ன பிரச்சனை என்னை பிடிக்காமல் இருந்தால் நான் வீட்டை விட்டு சென்றுவிடுகிறேன் என சொல்கிறார். உடனே மீனாவை முத்து கத்தி பேசாதே என செல்ல, உடனே மீனா என்னை அதிகாரம் செய்ய உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என கேட்கிறார். உடனே மூர்த்தி சென்றுவிட, வீட்டை விட்டு செல்ல நினைக்கும் மீனாவை அண்ணாமலை தடுத்து நிறுத்துகிறார். மீனா முத்து மீது பயங்கர கோவத்தில் இருக்க அவர் என்ன முடிவு எடுப்பார் என்பது அடுத்த எபிசோடுகளில் வர இருக்கிறது
Exams Daily Mobile App Download