மத்திய அரசின் புதிய திட்டம் – 2லட்சம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு!!
லேப்டாப், டேப்லெட்டுகள் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் 2 லட்சம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் லேப்டாப், டேப்லெட்டுகள், ஆல் இன் ஒன் பி.சி.க்கள், சர்வர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்மால் பார்ம் பாக்டர் கருவிகள் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, உள்நாட்டில் அடுத்த 6 ஆண்டிற்குள் ரூ.17,000 கோடி மதிப்பிலான ஐ.டி. ஹார்ட்வேர் உற்பத்தியை பெருக்க பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை – ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!
இந்நிலையில், டெல், பாக்ஸ்கான், எச்.பி., ரைஸ்சிங் ஸ்டார்ஸ், இந்தியா சேல்ஸ் 27 நிறுவனங்கள் பல லட்சம் கோடி மதிப்பிலான மடிக்கணினிகள், டேப்லெட், சர்வர்கள் மற்றும் பிற உபகரணங்களை தயாரிக்கும் பணியை துவங்கியுள்ளனர். இதன் உற்பத்தி அதிகமாகும் நிலையில் கிட்டத்தட்ட 2லட்சம் ஊழியர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.