தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை – ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!
தமிழகத்தில் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆரஞ்சு அலர்ட்
தமிழகத்தில் நவம்பர் மாதம் தொடங்கியது முதல் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை காஞ்சிபுரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியில் உள்ள அருகில் தற்போது குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 22,23,24 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கருணை பணி உடனடியாக வழங்க நடவடிக்கை – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
இதனை அடுத்து மேற்கண்ட 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட தினங்களில் 12 முதல் 20 செ.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.