தமிழக அரசில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் – உடனடியாக நிரப்ப கோரிக்கை!
தமிழக அரசு அலுவலகங்களில் உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புமாறு தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பல்வேறு பணிகள் முடங்கியது. இதனால் ஏராளமானோர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். அரசு பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எவ்வித தேர்வுகளும் நடைபெறவில்லை. அதனால் அரசு துறையில் புதிய பணி நியமனங்கள் ஏதும் நடைபெறாமல் உள்ளது. தற்போது அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருவதால் அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்து வருகிறது.
TNPSC குரூப் 4 தேர்வுக்கான பதவிகள், கல்வித் தகுதி, தேர்வு முறை – முழு விவரங்கள் இதோ!
இதனால் தற்போது பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பணி சுமை அதிகரித்துள்ளது. மேலும் பணிகள் அனைத்தும் தாமதமாகிறது. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர் என்று அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். மற்ற பதவிகளை தொடர்ந்து அரசு அலுவலங்களில் உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளது. இதனை உடனடியாக நிரப்ப கோரி தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளா்கள் மற்றும் அடிப்படை பணியாளா்கள் சங்கத்தின் அகில இந்திய தலைவா் அரசை வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் ரூ.20,000 சம்பளம் அதிகரிப்பு – ஊழியர்கள் மகிழ்ச்சி!
புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட சங்க கூட்ட அரங்கத் திறப்பு விழாவில் பங்கேற்ற அவா், அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பாததால் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் அரச அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளா்களுக்கு வேலைப்பளுவின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனா். எனவே காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் பணி ஓய்வு காலத்தை 62 வயது ஆக உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார்.