TNPSC குரூப் 4 தேர்வுக்கான பதவிகள், கல்வித் தகுதி, தேர்வு முறை – முழு விவரங்கள் இதோ!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இத்தேர்வுக்கான பதவிகள், கல்வி தகுதி மற்றும் தேர்வு முறை குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
குரூப் 4 தேர்வு:
தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் TNPSC தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 1, 2, 3, 4 மற்றும் VAO தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் குரூப் 4 தேர்வு மட்டும் லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். தற்போது இந்த குரூப் 4 தேர்வின் மூலம் VAO பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது. அதிக அளவிலானோர் இந்த குரூப் 4 தேர்வு எழுத முக்கிய காரணம் கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுவது ஆகும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் ரூ.20,000 சம்பளம் அதிகரிப்பு – ஊழியர்கள் மகிழ்ச்சி!
இந்த குரூப் 4 தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அரசு தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. பலரும் இந்த தேர்வை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு TNPSC தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்ற முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது குரூப் 4 தேர்வுக்கான பதவிகள், கல்வித்தகுதி, தேர்வு முறை மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
குரூப் 4 பதவிகள்:
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 7 பதவிகளுக்கு நடத்தப்படுகிறது.
கல்வித்தகுதி:
இந்த தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தட்டச்சர் பதவிக்கு 10 வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனை தொடர்ந்து சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 10 வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு 18 முதல் 30 வயது ஆகும். அரசின் விதிகளின்படி உள்ள இதர பிரிவினருக்கு 35 வரை வயது வரம்பு தளர்வு உண்டு. கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான வயது தகுதி, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை ஆகும். இதில் பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு. அதனை தொடர்ந்து மேல்நிலை, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை:
எழுத்து தேர்வை மட்டும் அடிப்படையாக கொண்ட இந்த தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு 1.5 மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 300 மதிப்பெண் வழங்கப்படும். அந்த 200 வினாக்களில் 100 வினாக்கள் மொழிப்பாடங்களில் இருந்தும், 75 வினாக்கள் பொது அறிவு மற்றும் 25 வினாக்கள் திறனறி தேர்வு அடிப்படையில் கேட்கப்படும்.
Best TNPSC Coaching Center – Join Now
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். பின்னர் மதிப்பெண் அடிப்படையில் குரூப் 4 தேர்வின் கீழ் உள்ள பதவிகளுக்கு உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஊர்களுக்கு பணி நியமனம் பெற்றுக் கொள்ள முடியும்.