சென்னையில் காலியாக உள்ள அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் – ஜூலை 8 கடைசி நாள்!
சென்னை மாவட்டத்தில் உள்ள சார் நிலை நீதிமன்றங்களில் பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக பணியாற்ற தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அரசு வழக்கறிஞர் பணியிடங்கள்:
தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக 2019-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. அதில் 2017-ல் உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு வழங்கிய உத்தரவை பின்பற்றாமல் நியமனம் நடைபெற்றுள்ளது. அதன்படி உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் 2019 ஆட்சியில் இருந்த அரசு அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக புதிய அரசாணையை பிறப்பித்தது.
தமிழகத்தில் ஜூன் 28 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? இன்று ஆலோசனை!
இந்த அரசாணையின் படி, அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமித்து புதிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே இந்த நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் நீதிமன்றம் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்காக வழக்கறிஞர்களிடம் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டு, தகுதியானவர்களை தேர்வு செய்யலாம் எனவும் இந்த மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து வழக்கை முடித்து வைத்தது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில்உள்ள சார் நிலை நீதிமன்றங்களில் பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக பணியாற்ற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி அறிக்கை வெளியிட்டுள்ளார். விருப்பமுள்ளவர்கள், மாவட்ட நடுவர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை, www.chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்த பின்னர், மாவட்ட நடுவர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர், சிங்கராவேலர் மாளிகை, எண்.62, ராஜாஜி சாலை, சென்னை – 600 001 என்ற முகவரிக்கு ஜூலை 8 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
Muhseena Fathima.no comments ,leave a reply
Tamil.exams