தமிழகத்தில் ஜூன் 28 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? இன்று ஆலோசனை!

4
தமிழகத்தில் ஜூன் 28 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? இன்று ஆலோசனை!
தமிழகத்தில் ஜூன் 28 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? இன்று ஆலோசனை!
தமிழகத்தில் ஜூன் 28 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? இன்று ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஜூன் 21ம் தேதிக்கு பின்னர் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை நடத்தி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று 2வது அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதில் அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க குறிப்பிட்ட நேரம் அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் அந்த தளர்வுகளும் நீக்கப்பட்டு மே 24 முதல் ஜூன் 7ம் தேதி வரை தீவிர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. எனவே கொரோனா பரவல் தினசரி பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது.

ஜூன் 19ல் சென்னையில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – பராமரிப்பு பணிகள்!

தினசரி 35 ஆயிரமாக இருந்த கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை, தற்போது 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஜூன் 21 வரை அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த ஊரடங்கில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர பிற 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. அதில் டாஸ்மாக், குளிர்சாதன வசதியின்றி சலூன் கடைகள், தேநீர் கடைகள் (பார்சல் மட்டும்) செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

தமிழகத்தில் ஜூன் 20 முதல் போக்குவரத்து சேவை தொடக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இருப்பினும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். இவை மீறப்பட்டால் எந்நேரமும் தளர்வுகள் திரும்ப பெறப்படும் என முதல்வர் எச்சரித்துள்ளார். இந்நிலையில் ஜூன் 21ம் தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் சில தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

செப்.1 முதல் 80% ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விப்ரோ நிறுவனம்!

இதில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி, நகைக்கடைகள், துணிக்கடைகள் திறக்க அனுமதி, பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில்கள் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனுடன் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கும் சில தளர்வுகள் வழங்கி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் (ஜூன் 28 வரை) நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூரவ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. ஊர் அடங்கு நீட்டிக்க பட வேண்டியது மிக அவசியம். அதே சமயம் ஏழை மக்களின் வாழ்வதைறம் பாதிக்கூடாது.
    மக்கள் அதிகம் கூடும் இடம் தளர்வு கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!