மே 1 முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கொரோனா தாக்கம் காரணமாக (மே 1) வார இறுதிநாள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு திங்கள்கிழமை வரை அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு ஊரடங்கும், ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தினசரி இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இறந்த சடலங்களை வீதியில் போட்டு எரிக்கும் அவல நிலை ஏற்படுகிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக வார இறுதிநாள் ஊரடங்கை மேலும் நீடிக்க உள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற (மே 1) சனி மற்றும் ஞாயிற்று கிழமை ஊரடங்கை மேலும் நீடித்து திங்கள் கிழமை வரை அமல்படுத்த உள்ளனர்.
மே 3 முதல் ஜூன் 6 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
அதன் படி வெள்ளிக்கிழமை இரவு (மே 1) 9 மணி முதல் தொடங்கி திங்கள் கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அந்த நேரத்தில் அத்தியாவசிய பொருள்களான பால், மளிகை, காய்கறிகள், மருந்து கடைகள் போன்ற கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 3 லட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.