மே 3 முதல் ஜூன் 6 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
குஜராத் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு மே 3 முதல் ஜூன் 6 வரை கோடை விடுமுறை வழங்கப்பட உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறை:
குஜராத் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் அந்த மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள், நீச்சல் குளங்கள், சினிமா அரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் நீர் பூங்காக்கள் போன்றவை மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அடுத்த கல்வியாண்டிற்கான CBSE பாடத்திட்டம் தொடங்கும் ஏப்ரல் மாதத்தில் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
SBI வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
மேலும் கொரோனா பரவல் பல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் அந்த நேரத்தில் பள்ளிகளை திறப்பது சிரமம். மேலும் அரசு, தனியார், அரசு உதவிபெறும் பள்ளிகள், இடைநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் என அனைத்திலும் ஆசிரியர்களுக்கு இந்த கோடை விடுமுறை நாட்களில் எந்த வேலையும் வழங்காமல் இருந்தால் சிறந்தது என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.