SBI வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக அதிகமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மோசடி நடைபெறுவதாகவும் அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என SBI வங்கி தெரிவித்துள்ளது.
SBI வங்கி விளக்கம்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பலரது பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச உணவு பொருள்களும் வழங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொரோனா எதிரொலியாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் பல்வேறு திருட்டுகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் ஊரடங்கு நேரத்தில் ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனை செய்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் ஆன்லைன் முறைகேடுகள் அதிகமாக ஏற்படுகிறது. இதனால் பலர் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!!
இதனால் SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் இடம் தவிர வேறு எங்கேயும் க்யூஆர் கோட் ஸ்கேன் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளது.