செப்.14 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் மேலும் ஒரு வார காலம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது செப்.15 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பரவலை தடுக்கும் நோக்கில் மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் தினசரி 4 லட்சம் வரை பதிவாகி வந்த கொரோனா புதிய பாதிப்புகள் தற்போது 40 ஆயிரமாக குறைந்துள்ளது. இருப்பினும் கொரோனா 3வது அலை அச்சத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் உத்தரகாண்ட் மாநில அரசும் ஊரடங்கை நீட்டித்துள்ளது. அதன்படி மாநிலத்தில் கொரோனா நிலைமை மோசமடைவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக பட்டு விவசாயிகள் கவனத்திற்கு – சூப்பர் அறிவிப்பு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நிலைமையை ஆய்வு செய்த பிறகு செப்டம்பர் 15 -ம் தேதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாநிலத்தில் அனைத்து சமூக, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, இருப்பினும், தடுப்பூசி இயக்கம் எந்த பின்னடைவும் இல்லாமல் தொடரலாம் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில், உத்தரகாண்டில் உள்ள அரசு அலுவலகங்கள் தேவையான அனைத்து கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றி, 100 சதவீத திறனுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று நிர்வாகம் கூறியுள்ளது.
2021 நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு – தேசிய தேர்வு முகமை!
தற்போதைய ஊரடங்கு உத்தரவின் போது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். பூங்காக்களும் 50 சதவிகித திறனுடன் மட்டுமே மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. உத்தரகாண்டிற்கு பயணம் செய்ய விரும்பும் அனைவரும் மாநிலத்திற்குள் நுழைவதற்கு முன்பு நெகட்டிவ் ஆர்டி-பிசிஆர் சோதனையை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் பயணம் செய்யும் போது தடுப்பூசி சான்றிதழை காண்பித்தால் இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.