இன்று முதல் மே 3 வரை முழு ஊரடங்கு உத்தரவு – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா இரண்டாம் அலை காரணமாக உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி மாவட்டத்திற்கு ஒரு வாரம் முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இன்று இரவு 7 மணி முதல் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என உத்தரகண்ட் அரசு தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கு:
கொரோனா இரண்டாம் அலை வெகுவிரைவாக பரவி வருகிறது. நோய்த்தொற்று பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைகிறது. குறிப்பாக இந்தியாவின் வட மாநிலங்களில் வைரஸ் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,368 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் 1,748 பேர் உயிரிழந்து உள்ளனர்.
N Job “FB Group” Join Now
மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களும் ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 28 வரை மூடப்படும் என்று உத்தராகண்ட் அரசு முன்பு உத்தரவிட்டிருந்தது. அம்மாநிலத்தில் உள்ள பவுரி மாவட்டம் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பபட்டுள்ளது. எனவே அம்மாவட்டத்தில் ஒருவாரம் முழு ஊரடங்கை உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது. இன்று இரவு 7 மணி முதல் மே 3 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு – உயர் நீதிமன்றம் பரிந்துரை!!
இது குறித்து அம்மாவட்ட நீதிபதி விஜயகுமார் கூறுகையில், நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கக்கப்பட்டதாக கூறினார். மேலும் மாவட்டத்தின் ஸ்வர்காஷ்ரம் மற்றும் லக்ஷ்மஞ்சூலாவின் கோட்வார் மாநகராட்சி பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும். மேலும் ஏப்ரல் 27 முதல் மே 3 வரை டேராடூன் மாவட்டம், ஹால்ட்வானி மாநகராட்சி, லல்குவான் நகர் பஞ்சாயத்து மற்றும் நைனிடால் மாவட்டத்தின் ராம்நகர் பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் கூறினார்.