பிப்ரவரி 8ம் தேதி முதல் 6 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
உத்தரகண்ட் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 8ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் பள்ளி மாணவிகளுக்கு சில கூடுதல் அறிவிப்புகளும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக பாடங்களை கற்று வந்தனர். பின்னர் தொற்று எண்ணிக்கை குறைந்ததால் படிப்படியாக கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி பல்வேறு மாநில அரசுகள் ஜனவரி மாதத்தில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்கின. உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
வேலை வாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் 9ம் வகுப்பிற்கு செல்லும் அனைத்து பிரிவு மாணவிகளும் சைக்கிள் வாங்குவதற்கு ரூ.2,800 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவும் அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்