வேலை வாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0
வேலை வாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
வேலை வாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
வேலை வாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை வழங்கி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பலர் வேலையிழந்த சூழ்நிலையில் இந்த உதவித்தொகை பெரும் உதவியாக இருக்கும்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் மாற்றம் – அரசாணை வெளியீடு!!

உதவித்தொகை பெறுவோர் பற்றிய விவரம்:

இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும், 9 ஆம் வகுப்பு படித்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200 உதவித்தொகையும், 10 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கு ரூ.300 உதவித்தொகையும், 12 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கு ரூ.400 உதவித்தொகையும், பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் 10 ஆம் வகுப்பிற்கு கீழ் பயின்றவர்களுக்கு ரூ.600 உதவித்தொகையும், 12 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கும் ரூ.750 உதவித்தொகையும், பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு “முன்பருவ கல்வி ஆசிரியர்” என பெயர் மாற்றம் – தமிழக அரசிடம் கோரிக்கை!!

வயது வரம்பு மற்றும் தகுதியுடையோர்:

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச குடும்ப வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு சார்ந்த ஏதேனும் உதவித்தொகை பெறுபவர்கள் இந்த உதவித்தொகை பெற இயலாது. இந்த உதவித்தொகை பெறுபவர்கள் எந்த கல்வி நிறுவனத்திலும் பயிலக் கூடாது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைப்பு -ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்!!

ஏற்கனவே 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர் மற்றும் பொறியியல் மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் பட்டப்படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியில்லை. இந்த உதவித்தொகை பெற தகுதி உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று பூர்த்தி செய்யலாம். மேலும் விவரங்களுக்கு https://tnvelaivaaippu.gov.in/ இணையதளத்தை பார்வையிடலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!