டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரின் மேல்முறையீடு வழக்கு குறித்து பார்க்கலாம்.
வழக்கு வாதம்
2021 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கையில் பண மோசடி செய்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து அமலாக்க துறை விசாரணை செய்தது. அதன் பின் அவர் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.
TNPSC தேர்வர்களே.. இந்த புக் வாங்குங்க – ஈஸியா பாஸ் பண்ணுங்க!
இந்த மனு விசாரணையில் பரபரப்பு வாதம் நடைபெற்றது. அதில் பண மோசடி வழக்கில் சட்ட விரோத கைதை எதிர்த்த அவரின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையில் கைதே சட்டவிரோதம் என்பதால் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார்.