உத்தர பிரதேசத்தில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை – இன்று முதல் ஜனவரி 14ம் தேதி வரை!!
நாட்டில் பல்வேறு நகரங்களில் பனிக்காலம் தொடங்கியதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உத்தர பிரதேசத்தில் பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை
நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பனிக்காலம் தொடங்கியதால் பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதில் குறிப்பாக உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய இடங்களில் பல்வேறு நகரில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே நொய்டா மற்றும் மீரட் பகுதியில் இருக்கும் பள்ளிகளுக்கு ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனை தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலத்தில் மணிப்புரி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், மணிப்புரி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் வருகிற ஜனவரி 14ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 முதல் தங்கத்தை இனி கனவில் தான் வாங்க முடியும் போல.. உலகை அதிரவைக்கும் விலை ஏற்றம்!
Exams Daily Mobile App Download
இதனை அனைத்து பள்ளிகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது போன்று ஹரியானாவில் ஜனவரி 1 முதல் 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.